பாடசாலை மாணவர்களுடன் இராணுவத்தினர் மோதலா? சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்.. |

ஹம்பகா – மினுவாங்கொட பகுதியில் இராணுவத்தினருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் மினுவாங்கொடையில் பாடசாலை மாணவர்கள் ஏழு பேருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. 

இந்த மோதலிற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews