ஏர் நிலம் அமைப்பினர் சிறப்புடன் நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா!

ஏர் நிலம் அமைப்பினர்  நடாத்திய விவசாயிகள் கெளரவிப்புடனான பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட தருமபுரம் நெத்தலியாறு முத்து விநாயகர்  ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் தருமபுரம் பகுதியில் வசிக்கும் மூத்த விவசாயிகளுக்கான கெளரவிப்பு நிகழ்வும்,  பொங்கல் நிகழ்வும், பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

முன்பள்ளி சிறார்களின் கலை நிகழ்வுகளும்,   இன் நிகழ்வின் முருகானந்தா பள்ளி முதல்வர், கிளிதருமபுரம் அ.த.க. பாடசாலை முதல்வர்,  கமக்கார அமைப்புக்கள், விவசாயிகள்,  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews