சுழிபுரத்தில் 80 kg கஞ்சா மீட்பு, கணவன் மனைவி கைது…..!

வீட்டு வளாகத்தில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 85 கிலோ கேரள கஞ்சா யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் சுழிபுரம் பறாளை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவும்,கடற்படையினரும் இணைந்து குறித்த பகுதியில் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

இதன்போது உரப்பையில் பொதியிடப்பட்ட நிலையில் வீட்டு வளாகத்திலிருந்த சுமார் 85 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews