வடமாகாணத்தில் தீவிரமடையும் கொரோனா அபாயம்..!

யாழ்.மாவட்டத்தில் 30 பேர் உட்பட வடக்கில் சுமார் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 16 பேருக்கும், சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் 14 பேருக்கும்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 3 பேருக்கும், வவுனியா தெற்றில் 4 பேருக்கும், வவுனியா வடக்கு – நெடுங்கேணியில் ஒருவருக்கும்,

வவுனியா வைத்தியசாலையில் 5 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 2 பேருக்குமாக 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews