கீரிமலை சிவன் ஆலயத்துக்கு வழமைபோன்று பேருந்து சேவைகள் இடம்பெறும்.. |

யாழ்.கீரிமலை சிவன் ஆலயத்துக்கான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமைபோன்று யாழ்.பஸ் நிலையத்தில் இருந்து நடைபெறும் என வடமாகாண பிரதம பிராந்திய முகாமையாளர் எஸ்.குணபாலசெல்வம் தெரிவித்தார்.

இன்று  செவ்வாய்க்கிழமை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறும் தேர் திருவிழா மற்றும் இரவு இடம்பெறும் சிவராத்திரி உற்சவத்தை காணச் செல்லும் அடியவர்களின் நன்மை கருதி இலங்கை போக்குவரத்துச்சபையின் பேருந்து சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews