தண்ணீர் போத்தலின் விலை 120 ரூபாயிலிருந்து 300 ரூபாவரை அதிகரிப்பு..!

மூலப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலையேற்றம், வெற்றுப் போத்தல்களின் தட்டுப்பாடு காரணமாக போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை இலங்கை தண்ணீர் போத்தல் விற்பனையாளர்கள் சங்கம் எடுத்திருக்கின்றது. அதற்கமைய, ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தலொன்றின் விலையை 120 ரூபா வரையிலும்  05 லீட்டர் தண்ணீர் போத்தலொன்றின் விலையை 300 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளதாக இலங்கை தண்ணீர் போத்தல்காரர்களுக்கான சங்கம் மேலும் கூறியுள்ளது

Recommended For You

About the Author: admin