அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடாத்திய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல்..!

அரசாங்கத்திற்கு எதிராக களனி பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலகம் விளைவித்ததுடன், மாணவர்களை தாக்கி, கொட்டகையை பிடுங்கி எறிந்து அட்டகாசம் புரிந்த பொஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

துமிந்த பெரேரா என்ற குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவேளை பலர் சட்டத்தரணிகள் மாணவர்கள் சார்பில் இலவசமாக ஆஜராகினர். நேற்றுமுன்தினம் கிரிபத்கொடவில் களனி பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை அப்பகுதிக்கு சென்ற துமிந்த பெரேரா மாணவர்கள் உருவாக்கிய பதாகையொன்றை சேதப்படுத்தினார் பின்னர் அவர் மாணவர்களை தாக்கினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews