பெண்ணின் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் கைதான நபர் பொலிஸாருக்க வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்..!

பெண் ஒருவருடைய தங்க சங்கிலியை அறுத்துச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேசன் தொழிலாளியான தனக்கு சீமெந்து விலையேற்றத்தால் தொழில் இல்லை, வருமாமானம் இன்மை போன்றவற்றால் சங்கிலி அறுத்ததாக பொலிஸாருக்கு கூறியிருக்கின்றார்.

குறித்த சம்பவம் ஹொரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீபாலி பல்கலைகழக வீதியில் பெண் ஒருவருடைய தங்க சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் சீ.சி.ரீ.வி கமரா பதிவுகள் மூலம் சந்தேகநபரையும் அவருடைய மனைவியையும் கைது செய்தனர்.

பொலிஸாரின் விசாரணையின் போது, ​​தான் மேசன்வேலையில் ஈடுபட்டு வருவதாக சந்தேக நபர் தெரிவித்திருந்தார். சீமெந்து மற்றும் ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக வருமானம் குறைந்துள்ளதால் தங்க நகையை கொள்ளையிட தீர்மானித்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews