யாழ்.பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில் தொடர் வழிப்பறி..! அச்சுவேலியில் பதுங்கியிருந்த இருவர் சிக்கினர், நகைகள் மீட்பு,.. |

யாழ்.இளவாலை பகுதியில் தொடர்ச்சியான வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இருவர் அச்சுவேலியில் வீடொன்றில் ஒளிந்திருந்த நிலையில் வைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த 22 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற பல வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைதான நபர்கள் வழிப்பறியில் பறித்த நகைகள் அடகுவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews