கட்டுதுவக்கு வெடித்து ஒருவர் படுகாயம், ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி…..!

கட்டுதுவக்கு வெடித்து ஒருவர் படுகாயம், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு  j/434 கிராம சேவகர் பிரிவில் பாலைப்பழம் பிடுங்க சென்ற ஒருவருக்கே  மிருகங்களை வேட்டையாடுவதற்காக  பொருத்தப்பட்டிருந்த பொறி வெடியான கட்டுத்துவக்கு வெடித்தே  தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுருந்த நிலையில்  அவர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு கொண்டு  செல்லப்ட்டுள்ளார்.
இதில் போக்கறுப்பு j/434 கிராம சேவகர் பிரிவிலுள்ள ஜோசப் மைக்கல் வலண்டன் எனும் 38 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளார்.  இது தொடர்பான மேலதிக, செய்திகளை மருதங்கேணி போலீசார் மேற்கண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews