நேற்றும் எரிபொருள் நிரப்ப மக்கள் நீண்ட வரிசை…..!

வடமராட்சி பகுதியிலுள்ள ஆறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எங்கும் எரிபொருள் இல்லாத நிலையில்  நேற்று காலையிலிருந்து மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மட்டும் பெட்ரோல் விநியோகம் இடம்பெற்றது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  காலை முதல் கொளுத்தும் வெயிலையும்  பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் நீண்டநேரம்  காத்திருந்து  மக்கள் பெட்ரோல் நிரப்புவதை அவதானிக்க முடிந்தது.
 இதேவேளை மதியம் ஒரு மணிக்கு பின்னர் குஞ்சர் கடை,  நெல்லியடி, கிராம கோடு, பருத்தித்துறை துறைமுகம் ஆகிய   எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு  அருகே பெட்ரோல் வந்துள்ளமையால் மக்களின் வரிசை ஓரளவு குறைந்த நிலையில் மக்கள் பெட்ரோல்  நிரப்பி செல்வதை அவதானிக்க முடிகின்றது.
எனினும் வடமராட்சியில் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும்  டீசல் மற்றும் மண்ணெண்ணெய் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews