புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் சஜித் பிரேமதாசவிற்கு ஜனாதிபதி கடிதம்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி பதில் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அதாவது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நான்கு அடிப்படை நிபந்தனைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

 

இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்தை தற்போது மாற்ற இயலாது என்றும், சஜித் பிரேமதாச முன்வைத்த சில நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையெனவும் ஜனாதிபதி தனது  கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews