மெக்சிகோவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு! 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

மெக்சிகோவில் அடுத்தடுத்த இரண்டு மதுபான விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

செலாயா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

விடுதிக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு! 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

Recommended For You

About the Author: Editor Elukainews