காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொலன்னறுவை, வெலிக்கந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹவெலிதென்ன பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாபோதல பிரதேசத்தை சேர்ந்த 76 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வாவி ஒன்றில் குளிப்பதற்காக நேற்று மாலை சென்ற போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானவரை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக வெலிக்கந்த வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews