இளவாலையில் வீடு புகுந்து திருடர்கள் கைவரிசையை 38 பவுண் நகை திருட்டு|

யாழ் இளவாலை பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த  கும்பல் வீட்டிலிருந்த 38  பவுண் நகைகளை திருடிச்  சென்றிருக்கின்றனர்.

யாழ்.இளவாலை – சிறுவிளான் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டில் கொண்டாட்டம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், அதில் கலந்துகொண்டவர்கள்  தூங்கிய நிலையில் வீட்டுக்குள் புகுந்த திருடன், நகைகளை திருடிச் சென்றுள்ளான். இதனையடுத்து காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அத்துடன் நகை திருட்டுபோன வீட்டில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் கைத்தொலைபேசி ஒன்றும் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் விசாரணை எதுவும் நடாத்தவில்லை என்றும் பாதிக்கப்பதத்டோர் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews