செட்டிக்குளம் பிரதேச விவசாயிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜக நடவடிக்கைக்கு கண்டனம்

வவுனியா செட்டிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜக நடவடிக்கை மற்றும் அவர்களது வாழ்வை பறிக்கின்ற செயற்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேறறு (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு இருக்கின்ற தமிழ் விவசாயிகள் தங்களது வாழ்வுக்காக நீண்டகாலம் போராடி வருகின்றார்கள்.

தங்களது மண்ணோடு மண்சார்ந்த தொழிலை செய்வதற்காக நீண்டகாலம் போராடி வருகின்றார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews