இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமர் விசேட உரை –

இம்மாதத்துக்கான பாராளுமன்ற அமர்வு இன்று (7) ஆரம்பமாகவுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் என்பன தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

அத்தோடு பிரதமரின் உரை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் மறுசீரமைக்கப்பட்ட நிவாரண வரவு – செலவு திட்டம் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரையை ஆற்றவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews