மன்னாரில் பதற்றம்: சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை!

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில், இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல், வாள்வெட்டில் முடிவடைந்ததாக, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 4 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள், உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சடலங்கள், மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews