மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்துச் சம்பவம்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற காரொன்று கல்லடி சாந்தி படமாளிகைக்கு முன்னால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதை மாறி கல்முனை திசையிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய போதே விபத்து ஏற்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிளில் பயணத்தவர் படுகாயமடைந்த நிலையிலும் காரில் பயணித்த மற்றொருவரும் கடுகாயமடைந்த நிலையிலுமாக இருவரும் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த கார் பாராளுமன்றத்தில் கடமை புரியும் ஒருவருடையதெனவும் தெரியவருவதுடன்.காரினுள் மதுசார போத்தல்களும் காணப்பட்டதாகவும் காத்;தான்குடி பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews