வீசிய கடும் காற்றினால் ஈச்சிலம் பற்று பிரதேச செயலர் பிரிவில் 29 வீடுகளும் 30க்கும் மேற்பட்ட படகுகளும் சேதம்….!

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் சீனன்வெளி ஆகிய கிராமங்களில் இன்று மாலை 4.30மணியளவில் சிறிய அளவிலான சூறாவளிக் காற்றின் காரணமாக 29வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மரங்கள் முறிந்து விழுந்தமையினால் உந்துருளி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பாரிய இரைச்சலுடன் சூறாவளித் தாக்கம் ஆரம்பித்த போது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியமையினால் எவ்விதமான உயிர்ச்சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை. மேலும்  30 க்கு மேற்பட்ட படகுகளும் சேதமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews