மருந்து தட்டுப்பாடு நிலவும் நிலையில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாம்…பணிப்பாளர் கேதீஸ்வரன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் குறித்த களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பட்டுள்ளது.
 விபத்து ஏற்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததோடு   இழப்பீடு தொடர்பில் விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என தெரிவித்தார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டில் மறந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் எவ்வாறு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகள் சேமிக்கப்பட்டது என்ற சந்தேகங்கள் எழுகின்றமை குறிப்பிடத்தக்கது.75

Recommended For You

About the Author: Editor Elukainews