கறுப்புச் சந்தை வியாபாரிகளுக்கு எரிபொருள் வழங்க மறுத்ததால் நல்லுார் ப.நோ.கூ சங்க எரிபொருள் நிரப்பு நிலைத்திற்கு 3வாரங்கள் விநியோகம் இல்லை..!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள நல்லுார் ப.நோ.கூ சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 3 வாரங்கள் எரிபொருள் வழங்கப்படாமல் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சேவை நடைபெறாமலிருப்பது தொடர்பாக ஊடகங்கள் வினவியபோதே மேற்படி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து சட்டத்திற்கு மாறாக எரிபொருள் எடுக்கப்பட்டுவந்ததாகவும்,

மக்கள் எரிபொருளுக்காக போராடிவரும் நிலையில் மேற்படி சட்டவிரோத நடவடிக்கைக்கு நல்லுார் ப.நோ.கூ சங்கத்தினர் மறுப்பு தொிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews