அரச ஊழியர்களுக்கு வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு..!

கடமைக்கு செல்வதற்காக எரிபொருள் பெற்றுள்ள அரச ஊழியர்கள் இன்று கடமைக்கு கட்டாயம் செல்லவேண்டும். என வடமாகாண ஆளுநர ஜீவன் தியாரகராஜ கூறியுள்ளார்.

இ.போ.ச பேரூந்துகள் சாரதி, காப்பாளர்கள் தாம் கடமைக்கு செல்வதற்குரிய எரிபொருளை உரிய தரப்பினர் தமக்கு பெற்றுத் தரவில்லை என நடத்திய ஊடக சந்திப்பை அடுத்து ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில்  கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தமது கடமைகளை காரணங்காட்டி எரிபொருளை பெற்றவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews