மட்டு.ஊறணி மயானாட்சியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு தீமிதிப்பு உற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஊறணி மயானாட்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு தீமிதிப்பு உற்சவம் இன்று காலை நடைபெற்றது.

கடந்த 01ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமான அலங்கார திருச்சடங்கில் தினமும் விசேட பூஜைகள்,ஊர்காவல் என்பன நடைபெற்றுவந்தது.

ஆலயத்தின் பிரதமகுரு க.சத்தியசீலன் தலைமை திருச்சடங்கில் நேற்று மாலை தொடக்கம் விசேட பூஜைகள்,தீக்குளிமூட்டும் நிகழ்வு நடைபெற்று இன்று காலை தீக்குளிக்கும் அம்பாளுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்று தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய தீமிதிப்பு உற்சவத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews