பொதுமக்களை பாதிக்கும் பணிப் புறக்கணிப்பு போராட்டம்! உயர் அரச அதிகாரிகள் இருவர் பதவி நீக்கம்.. |

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும் வகையில் நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு சம்பவம் தொடர்பில் மின்சாரசபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பணிப் புறக்கணிப்பினால் ஏற்பட்ட மின்வெட்டு சம்பவம் தொடர்பில் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான சம்பவம் தொடர்பில் மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews