க.பொ.த உயர்தரம்/ சாதாரணதரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு…!

2022 க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி நடத்துவதற்கும், 2022 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை,  2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews