பொதுமகன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்..! பணி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ அதிகாரி.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் இராணுவ அதிகாரியை பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகேயின் பணிப்புரையின் பெயரில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது.

இதனால் விசாரணைகள் நிறைவடையும்வரை குறித்த அதிகாரி அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை பாதுகாப்பு அமைச்சு வெளிப்படுத்தியுள்ளதுடன்,

மேலும் இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியின் தலைமையில் ஐவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews