நாட்டில் எரிவாயு, எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை: ஜனாதிபதி.

நாட்டில் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், நேற்று மாலை, விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய்க் கிழமைக்குள், இலங்கையை வந்தடையும்.
எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் தவறான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றி அடைந்துள்ளதுடன், அடுத்த சில வாரங்களுக்குள், நிதித்திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘நீண்ட மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிக்குப் பிறகு, நாடு பலன்களைப் பெறுகிறது.’
நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பு பெறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து, 44 ஆயிரம் மெட்ரிக் தொன் உர முதல் தொகை, நாளை வரவுள்ளது.
எதிர்வரும் 12 ஆம் திகதி முதல், எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், தொடர்ந்து விநியோகிக்கப்படும்.
உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க, பல விவசாயத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
அத்துடன், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு, அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.
என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews