மக்களின் அமைதி போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது- எதிர்க் கட்சித் தலைவர்

இந்நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் முழு மக்களும் முன்னெடுத்த அமைதிப் போராட்டத்தை முறியடிக்க அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில் இருவரை பாதுகாப்பதை விடுத்து முழு நாட்டு மக்களையும் பாதுகாப்பு படையினர் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசேட காணொளிப் பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரை வைத்து ஜனநாயகத்தை அழித்து மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் தூண்டி வருகின்றுது.

இந்நேரத்தில் பாதுகாப்புப் படையினர் பொறுப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

அதிகார வெறி பிடித்த ஐனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான கும்பலின் ஏமாற்றை உடனடியாக நிறுத்த வேண்டும். இனி மேலும் இந்த ஏமாற்று மோசடிக்கு இடமில்லை.

ஜனநாயகத்துக்காக போராடும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்த வேண்டாம் என பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

பாதுகாப்புப் படையினர் மீது மக்கள் வைத்துள்ள மரியாதையை காப்பாற்றுமாறும் கோருகின்றோம்.

மக்களின் அமைதியான வாழ்வுடன் விளையாடுவதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

இந்தத் தருணத்தில் மக்கள் அமைதியாகவும் ஜனநாயகத்தை மதித்தும் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews