எரிபொருள் வரிசையில் இரு தரப்பினர் இடையில் முறுகல்..! 7 பேரை கைது செய்தனர் பொலிஸார்… |

எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கும் வரிசையை குழப்பியோருக்கும் இடையில் உருவான முறுகல் சம்பவத்தை தொடர்ந்து 7 பேரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றய தினம் வவுனியா – வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் கூறினர். சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன இலக்கதகடுகளின் கடைசி இலக்க அடிப்படையில் மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சொகுசு கார்கள் என்பவற்றுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.

இந்நிலையில், எரிபொருள் பெறுவதற்கு செல்லுமிடத்தில் வாகனங்கள் கூடியமையால் வரிசையில் நின்றோருக்கும், வரிசையை குழப்பியோருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை நிலவியது.

சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் அமைதியின்மை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார்

அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews