மெக்ஸிகோவில் 57 பாடசாலை மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் பரபரப்பு

மெக்ஸிகோவில் பாடசாலை ஒன்றின் மாணவர்களான 57 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்டமை தொடர்பில் சியாபாஸ் மாகாண பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அங்குள்ள ஒரு பாடசாலை மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும், அதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ஸிகோவின் தெற்கு மாகாணமான சியாபாசில் உள்ள கிராமப்புற மேல்நிலைப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin