யாழில் வர்த்தக நிலையங்களில் வைத்து போதை மாத்திரை விற்பனை: முதவல்வரின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி, யாழ்.மாநகர முதல்வருக்கு நேற்று(17.10.2022) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புடவை விற்பனை நிலையங்களில் வைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி, மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டி யாழ்.மாநகர முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் பிரதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கும், வர்த்தக சங்கத்தினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பணிப்பாளர் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம் என யாழ்.மாநகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் வர்த்தக நிலையங்களில் வைத்து, போதைவஸ்துடன் கைது செய்யப்பட்டிருப்பின், விரைவில் அந்த நிலையங்களினை மூடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin