சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகை கைப்பற்றியதோடு அதிலிருந்த மூன்று இந்திய கடற்தொழிலாளர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதான கடற்தொழிலாளர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதான கடற்தொழிலாளர்கள் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin