பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் – எதிர்க் கட்சித் தலைவர்

பிரச்சினைகளால் சோர்ந்து போயிருக்கும் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே சக்தி ஐக்கிய மக்கள் சக்தியாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கடுவெல தேர்தல் தொகுதி கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதற்கான சிறந்த அணி ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாகவும் சரியான சிந்தனை, சரியான வேலைத்திட்டம் மற்றும் நிலையான தத்துவம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பலத்தையும் பயன்படுத்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தான் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews