பேருந்திற்காக நின்றவர்களை மோதித் தள்ளிய பாரவூர்தி!

கண்டி – மஹியங்கனை வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று, பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற பொதுமக்கள் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்த நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு நித்திரைக் கலக்கம் ஏற்பட்டதால், பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் சிறுவன் ஒருவன் உட்பட 8 பெண்களும் 2 ஆண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews