யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் மீன்பிடி படகை கொழுத்தி விசமிகள் அட்டகாசம்.. |

யாழ்.கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மர்ம நபர்களினால் படகு ஒன்று தீவைத்துக் கொழுத்தப்பட்டுள்ளது. 

இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர்.

சேதப்படுத்திய காட்சி அங்கு வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews