மதில் அருகால் சென்ற இளைஞர் மீதி மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழப்பு..!

மதில் அருகால் சென்ற இளைஞர் ஒருவர் மீது  அவ் மதில் இடிந்து விழுந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம்  நேற்று சனிக்கிழமை(24) மாலை 4.00 மணியளவில் செம்மண்பிட்டி, இலட்சுமணன் தோட்டம், தும்ரபளையில் இடம்பெற்றுள்ளது.
 இச்சம்பவத்தில் விக்னராஜா கிருஷ்ணன் (வயது- 32) என்பவரே உயிரிழந்தவராவார்.
ஒழுங்கையால் சென்று கொண்டிருநத போது மதில் இடிந்து வீழ்நது குறித்த இளைஞன் மீது வீழ்ந்துள்ளது.
 இதனால்  தலையில் படுகாயமடைந்த இளைஞனை உடனடியாக அயலவரால்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இம்மரணம் தொடர்பில் தும்பளை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் பருத்தித்துறை பொலீசாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews