மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு…! 20 வயதான மகன் கைது.

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்த நிலையில் 20 வயதான மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் மாவனெல்ல – மகேஹெல்வல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 45 வயதான தந்தையே உயிரிழந்துள்ளார்.

இறந்தவர் நேற்றுமுன்தினம் (25) இரவு மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தந்தையை  தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தந்தையின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews