ஜனாதிபதியின் பங்கு பற்றுதலோடு 75 வது சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெறவுள்ளது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு

தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார்,

75 ஆவது சுதந்திர தின நிகழ்வு தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன

குறிப்பாக  பெப்ரவரி நான்காம்  திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில்  அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு  நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும்  முன்னெடுக்கப்படுகின்றன

அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது , குறிப்பாக கலாச்சார மத்திய நிலைத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில்  இருக்கிற கௌரவ ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள்  மத்திய கலாச்சார அமைச்சுடன்   இணைந்ததாக  கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

அத்தோடு ஒட்டியதாக  சுதந்திரதின நிகழ்வினை  முக்கியமாக மாகாண மட்டத்திலே  இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொள்வதற்கு ஏற்ற வாறாக  நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவே ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதால் பெரியளவில் இடம்பெற்ற வுள்ளதாகவும் தெரிவித்தார்,

Recommended For You

About the Author: Editor Elukainews