மீண்டும் இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கான பயணத்தை தவிர்த்த சுற்றுலா பயணிகள் அண்மைக்காலமாக நாடு ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதையடுத்து தற்போது வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, 2022 டிசம்பர் 26ஆம் திகதி வரையில் 701,331 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய கண்டத்திலுள்ள மோல்டா நாட்டிலிருந்து பெருமளவான சுற்றுலாப் பயணிகள் முதற்தடவையாக இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews