நீதிமன்ற உத்தரவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை கடத்திய நபர் கைது!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பவதியான 15 வயது சிறுமியை வைத்தியசாலையிலிருந்து கடத்திச் சென்ற 24 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் அனுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுமி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் பொறுப்பில்

அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சந்தேக நபரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி தற்காலிக விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள நண்பரின் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews