சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை, வவுனியா மாவட்டங்களின் ஆலயங்களுக்கு நிதி உதவி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் திருகோணமலை மாவட்டம் சாம்பல்தீவு பிரதேசத்தில் உள்ள இலுப்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மண்கிண்டி மலை ஶ்ரீ முருகன் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 100000 ரூபா நிதி உதவியும், செல்வநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள உதயபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆலய கட்டிட பணிக்காக 50000 நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளதுடன்

வவுனியா மாவட்டம் – நெடுங்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 50000 ரூபாவும் நிதி உதவிகள் வழங்கப்பட்டதுடன் அவ் ஆலயத்தின் கட்டிட வேலைகளை, மற்றும் திருமலை ஆலயங்களிற்க்கு  சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள்  கடந்த 4/1/2023 அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு, உதவிகளையும் வழங்கிவைத்தார் அவருடன் . ஆச்சிரம தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews