உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் உள்ளூர் துப்பாக்கி உற்பத்தியில் சிலர் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து தருமபுர பொலிசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகள் உற்பத்தியில் (இடியன்) ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து மூன்று உள்ளூர் துப்பாக்கிகள் மற்றும் அதன் உபகரணங்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபர் நேற்றைய தினம்21.04.2023 கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி .எம் சதுரங்க தெரிவித்துள்ளார். 

Recommended For You

About the Author: Editor Elukainews