நெடுந்தீவில் 3 பெண்கள் உட்பட ஐவர் வெட்டிப் படுகொலை!

நெடுந்தீவில் 5 நபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கிராம சேவகரிடம் வினவிய போது, அவரும் சம்பவம் இடம்பெற்றது உண்மையென உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் நெடுந்தீவு 12ஆம் வட்டாரம் j/06 கிராம சேவகர் பிரிவில், மாவிலி துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவதாகவும், ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தெடார்பில் மேலதிக தகவல்கள் எவையும் இது வரை வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் கடற்படையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews