2012ற்கு பின்னர் இலங்கையில் அதிகரிக்கும் நில அதிர்வுகள்?

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டில் 16 அதிர்வுகளும், 2021இல் 18 நில அதிர்வுகளும், 2022 இல் 5 அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் எம்.எம்.ஜே.பி அஜித் பிரேம தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் மிகத் தெளிவான பதிவுகள் 2012ற்கு பின்னரே உணரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews