ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் முற்பகல் 9 மணி முதல் 12 மணிக்குள் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீட் மொஹமட் ரிபாய் மற்றும் மொஹமட் மர்சுக் ரிலா ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews