புகையிரத கடவை விபத்துக்களை தடுக்க இ-கேட் திட்டம்!

அபாயகரமான தொடருந்து விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை தொடருந்து திணைக்களம், நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
அதன்படி, தொடருந்து வலையமைப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 400 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகளில் இ-கேட் அமைப்பை அமைக்க உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தொடருந்து திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமானக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து CodeGen International ஆல் இந்த இ- கேட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொடகம தொடருந்து நிலையத்திற்கு அருகில் இ-கேட் பரீட்சார்த்த திட்டம், அண்மையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு, தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews