மட்டு வாழைச்சேனையில் கோழிச் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் 6 சண்டை கோழியுடன் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் பணத்துக்காக கோழிச் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை சனிக்கிழமை (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை கோழிககள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து நாவலடி பிரதேசத்தில்  சம்பவதினமான இன்று மாலை 6 மணியளவில் கோழி சண்டை நடாத்திவந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிசார் அங்கு கோழிச் சண்டையில் ஈடுபட்டிருந்த 6 பேருடன் கோழிச் சண்டையை பாhத்துக் கொண்ட ஒருவர் உட்பட 7 பேரை கைது செய்ததுடன் 6 கோழிகளையும் ஒரு தொகை பணத்தையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தைச் சேர்ந்த 26 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும்  இவர்களை நீதிமன்றில் ஆpர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews