பாகிஸ்தானில் தேசிய துக்க நாள்:750 பாகிஸ்தானியர்களுடன் கடலில் மூழ்கி படகு!

கிரீஸ் கடற்பகுதியிலிருந்து ஜூன் 14 அன்று ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக சுமார் 750 பேருடன் சென்ற இழுவைப்படகு மூழ்கியதில் 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் செனட் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
ஏறக்குறைய 750 பேர் குறித்த படகில் இருந்ததாகவும், அவர்களில் குறைந்தது 500 பேரைக் காணவில்லை என்றும் ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பாகிஸ்தானியர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதாக நம்பப்படும் 10 மனித கடத்தல்காரர்கள் பாகிஸ்தானில் கைதாகியுள்ளனர்.
பாக்கிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், பலர் தங்களால் இயன்ற வழிகளில் நாட்டை விட்டு வெளியேறும் நேரத்தில் இந்த சோகம் நிகழ்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாகிஸ்தான் இன்று திங்கட்கிழமை தேசிய துக்க நாளாக அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews