குழந்தைகளுக்கு எச்சரிக்கை விடுத்த வைத்தியர்கள்!

நிலவும் வரண்ட காலநிலையால் குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நீர்ச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகள் இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாக காணப்படுவதாகவும் எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகளை குடிக்க கொடுக்க வேண்டும் எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

வரண்ட காலநிலையுடன் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற நோய்களும் பரவக்கூடும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews